Thursday, May 14, 2020

Dr. APJ அப்துல் கலாம் - 2


மண்ணுலக மா மேதை நீ

அணு உலக நாயகன் நீ

விண்ணுலகு ஆய்வு கண்ட

தன்னிகரா தவப் புதல்வன் நீ !  

 

தொலை நோக்குப் பார்வை தீர்க்க தரிசியாய்

நதி இணைப்பினிலே நாட்டம் கண்டு

திட்டங்கள் பல தீட்டி தந்து

நாடு நலம் காணிடும் சிந்தனை சிற்பியே !

 

மாற்று திறனாளியின் சுமை குறைத்து

மனம் நிறைவு தனை பெற்று தந்து

ஆராய்ச்சி பலதில் வெற்றி கண்டு

சரித்திரம் படைத்த மா சஹாப்தமே  !

 

அமைதி சமாதானத்தை நாட்டிட என்றும்

உலக நாடுகளில் உரைதனை ஆற்றி

உலகமே போற்றும் உன்னத நாயகனாய்

வழிகாட்டி நின்ற கலங்கரை விளக்கமே!

 

நினைவலைகள் பகிர்ந்த தனிலே

நெஞ்சத்தை உருக்க வைத்தாய்

நீரலையை விழியில் தந்து விட்டு

நெஞ்சத்திலே நின்று விட்டாய் !

 

பட்டங்கள் பதவிகள் வந்த போதும்

விருதுகள் புகழாரம் குவிந்த போதும்

பண்பின் சிகரமாய் வாழ்ந்து நின்று

பணிவுடனே நேர்மையாய் வாழ்ந்து வந்தாய் !

 

வையகத்துள் வாழ்ந்து உயர்ந்து

வானுலகை ஆய்ந்து வந்தாய்

வையகத்தை வாட வைத்து

வானுலகு சென்று விட்டாய் !

 

வையகம் இருக்கும் நாள் வரை

வானுலகு நின் புகழ் ஓங்கிடுமே

வையகம் நன்கு உய்ந்து  விட

வானுலகு  நட்சத்திரமாய் வழி காட்டுவாயே !

 

மாணவ மணிகள் நன்கு படிக்   கலாம்

கனவு காணிட நன்கு முயற்சிக் கலாம்

நனவு கண்டிட நன்கு உழைக்    கலாம்

என நல்லுரை நல்கிய அப்துல்   கலாம் புகழ் ஓங்குக!

 

சந்தர் சோமயாஜிலு (@)

சிவ ராம தாஸன்


No comments: