மண்ணுலக மா மேதை நீ
அணு உலக நாயகன் நீ
விண்ணுலகு ஆய்வு கண்ட
தன்னிகரா தவப் புதல்வன் நீ !
தொலை நோக்குப் பார்வை தீர்க்க தரிசியாய்
நதி இணைப்பினிலே நாட்டம் கண்டு
திட்டங்கள் பல தீட்டி தந்து
நாடு நலம் காணிடும் சிந்தனை சிற்பியே !
மாற்று திறனாளியின் சுமை குறைத்து
மனம் நிறைவு தனை பெற்று தந்து
ஆராய்ச்சி பலதில் வெற்றி கண்டு
சரித்திரம் படைத்த மா சஹாப்தமே !
அமைதி சமாதானத்தை நாட்டிட என்றும்
உலக நாடுகளில் உரைதனை ஆற்றி
உலகமே போற்றும் உன்னத நாயகனாய்
வழிகாட்டி நின்ற கலங்கரை விளக்கமே!
நினைவலைகள் பகிர்ந்த தனிலே
நெஞ்சத்தை உருக்க வைத்தாய்
நீரலையை விழியில் தந்து விட்டு
நெஞ்சத்திலே நின்று விட்டாய் !
பட்டங்கள் பதவிகள் வந்த போதும்
விருதுகள் புகழாரம் குவிந்த போதும்
பண்பின் சிகரமாய் வாழ்ந்து நின்று
பணிவுடனே நேர்மையாய் வாழ்ந்து வந்தாய் !
வையகத்துள் வாழ்ந்து உயர்ந்து
வானுலகை ஆய்ந்து வந்தாய்
வையகத்தை வாட வைத்து
வானுலகு சென்று விட்டாய் !
வையகம் இருக்கும் நாள் வரை
வானுலகு நின் புகழ் ஓங்கிடுமே
வையகம் நன்கு உய்ந்து விட
வானுலகு நட்சத்திரமாய் வழி காட்டுவாயே !
மாணவ மணிகள் நன்கு படிக் கலாம்
கனவு காணிட நன்கு முயற்சிக் கலாம்
நனவு கண்டிட நன்கு உழைக் கலாம்
என நல்லுரை நல்கிய அப்துல் கலாம் புகழ் ஓங்குக!
சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்
No comments:
Post a Comment