Thursday, June 4, 2020

அன்னாசி வெடி ஆனை பலி











பழத்தைக் 
கொண்டு
பலம் காட்டிய 
பலவீனனே

மத கஜ 
யானையைக்
கொல்ல மனம் 
வந்ததே

அன்னாசியில் 
வெடி வைத்து
அன்னம் 
தந்தது ஏனோ

அறியாத 
கர்ப்பிணி ஆனை
அழகு குட்டியுடன் 
மாண்டதே

உன் பிள்ளைக்கு 
வெடி வைத்து 
ஊன் நீ
தருவாயோ

ஊனமாக்கி 
உடலை பொசுக்கி
உள்ளம் உவந்து 
மகிழ்வாயோ 

மனித நேயம் 
எங்கே எங்கே
ஈவு இரக்க குணம் 
எங்கே எங்கே

வாயில் ரத்த 
கசிவுடனே
வயிற்றில் குட்டியுடன் 
பலியிங்கே

நானிலத்தில் 
மானுடர் நீ
விலங்கு குணம் 
கொண்டால்

மானுடன் வேடம் 
ஏனடா நிஜமாய்
விலங்காய் மாறி 
காட்டுக்கு ஓடுடா

அன்னத்தில் விஷம் 
வைப்போரும்
அன்னாசியில் வெடி 
வைப்போரும்

அகிலத்தில் வாழ்ந்து 
என்ன பயனடா
அறவே ஒழிந்து 
போய் விடுடா

சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்


2 comments:

Umagurusubramanian said...

அருமை👍

Unknown said...

மனிதன் என்பவன் யார் தெரியுமா?
இவர்கள் இல்லை.

கவிதையில் கூறிய மிருகங்கள்.