பழத்தைக்
கொண்டு
பலம் காட்டிய
பலவீனனே
மத கஜ
யானையைக்
கொல்ல மனம்
வந்ததே
அன்னாசியில்
வெடி வைத்து
அன்னம்
தந்தது ஏனோ
அறியாத
கர்ப்பிணி ஆனை
அழகு குட்டியுடன்
மாண்டதே
உன் பிள்ளைக்கு
வெடி வைத்து
ஊன் நீ
தருவாயோ
ஊனமாக்கி
உடலை பொசுக்கி
உள்ளம் உவந்து
மகிழ்வாயோ
மனித நேயம்
எங்கே எங்கே
ஈவு இரக்க குணம்
எங்கே எங்கே
வாயில் ரத்த
கசிவுடனே
வயிற்றில் குட்டியுடன்
பலியிங்கே
நானிலத்தில்
மானுடர் நீ
விலங்கு குணம்
கொண்டால்
மானுடன் வேடம்
ஏனடா நிஜமாய்
விலங்காய் மாறி
காட்டுக்கு ஓடுடா
அன்னத்தில் விஷம்
வைப்போரும்
அன்னாசியில் வெடி
வைப்போரும்
அகிலத்தில் வாழ்ந்து
என்ன பயனடா
அறவே ஒழிந்து
போய் விடுடா
சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்
2 comments:
அருமை👍
மனிதன் என்பவன் யார் தெரியுமா?
இவர்கள் இல்லை.
கவிதையில் கூறிய மிருகங்கள்.
Post a Comment