Sunday, June 21, 2020

தந்தையர் தினம்






அவனியில் எனக்கோர்
பிறவி தந்தார்
அவருக்கு தந்தையெனும்
பெருமை தந்தேன் (அ)

அம்மை என்னும் முன்
எதிர் தெய்வம்
காட்டிய மற்றோர் முன்
எதிர் தெய்வமன்றோ

அவர் இல்லை எனில்
நான் என்பது ஏது 
அதை எடுத்துரைக்கும்
இக்கவிதை ஏது ? (அ)

தன்னலம் மறந்து என்னைக்
காத்தவள் அன்னையன்றோ
தன்னையே மறந்து என்னைக்
காத்தவர் தந்தையன்றோ

தந்தையின் பெருமை
தான் உணரார்
தந்தையான பின்னே
தான் உணர்வார் (அ)

இருக்கும் பொழுது
அருமை அறியார் பின்
இல்லாத பொழுது
வெறுமை உணர்வார்

அனைத்தும் பிள்ளைக்கு
என தான் வாழ்வார்
அனைத்தும் தந்து நின்ற
ஆசான் ஆவார் (அ)

கல்விக் கண்ணைத் திறந்து 
அறிவுச் செல்வம் தந்து
அன்பும் பண்பும் காட்டி
ஆருயிர் ஒழுக்கம் காட்டி

தன்னம்பிக்கை யாவும் தந்து
ஊக்கம் உற்சாகம் மூட்டி
நற்பண்பாளனாய் ஆக்கிய
தந்தைக்கு வந்தனம் ! (அ)

சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்




8 comments:

Umagurusubramanian said...

அருமை!

Unknown said...

அருமை

Unknown said...

சந்துரு

அருமையான பகிர்வு

Unknown said...

அருமையான கவிதை. வாழ்த்துக்கள்.

Sekhar said...

Nice

Lakshmi Somayajilu. said...

Excellent

Lakshmi Somayajilu. said...

Excellent.

Lakshmi Somayajilu. said...

Excellent