நிழலில்லா நாள்
காண வாரீர் நண்பா நீ (நி)
ஈரிரு ஆங்கிலத் திங்கள்
இருபத்தி நான்காம் நாளாம்
நற்பகல் மதிய வேளை தனிலே
நானிலம் கண்டு களிக்க (நி)
கடக ரேகைக்கும்
மகர ரேகைக்கும் இடையே
பகலவன் கடக்கும் பொழுதினில்
காண இயலாத ஒரு (நி)
செங்குத்தாய் சூரியன்
தலை உச்சி நேர் மேலே
நம் பாதம் தனில் வீழும்
நிழல் தனை காண இயலா (நி)
வருடம் இரு முறை தோன்றும்
நிழல் பூஜ்ஜிய நிகழ்வினை
கவி சிவ ராம தாசனும்
காண விழையும் எழில் (நி)
சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்
No comments:
Post a Comment