குரலுக்கு வந்தனம்
செய்வோம்
தாய் மொழி பேசும்
இனியதொரு (கு)
ஈரிரு ஆங்கில
மாதமதில்
ஈரெட்டு தினம்
தனிலே
உலக குரல்
தினமாய்
கொண்டாடும்
வேளையில் (கு)
பச்சிளம்
எழிலொரு
யாழினும்
இனியதொரு
அமுதினும்
இனியதொரு
தேன் சுவை
மழலை (கு)
குயிலினும்
மிக்கதொரு
இன்னிசை
கலந்ததொரு
கானத்தை
தந்ததொரு
தெய்வீகக்
கானக்குயில் (கு)
சிவ ராம
தாஸன்
சிந்தையை
மகிழ்விக்கும்
பாடும் பூரண
நிலவாய்
பரவசம்
தந்திடும் (கு)
சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்
No comments:
Post a Comment