Tuesday, May 19, 2020

சிகண்டி பூர்ணம்



தில்லை தலத்து
     திவ்ய மணியிது
தியானத்தில் ஆழ்த்திடும்
     தெய்வீக மணியிது

சிதம்பர ஆலயத்தில்
     ஒலிக்கும் ஓசையிது
சிங்கார எழில்மிகு
     ஆலய மணியிது

அருட் பெருஞ்சோதி
     அருளிய மணியிது
ஆன்ம அனுபவ உணர்வால்
     அறிந்திடும் மணியிது

இறைநெறித் தந்திடும்
     இசையொலி மணியிது
இரட்டை ஒலி மிகுந்த
     இனிய மணியிது

வள்ளலார்க்கு அருளிய
     வெள்ளி மணியிது
வார்த்தைக்கு எட்டாத
     அனுபவ நிலையது

ஓங்கார நாதன்
     ஒளிவருள் பொழியும்
ஒய்யார ஓசையிது
     ஒப்பிலா மணியிது

சீவனை சிவமாக்கும் 
     சிகண்டி பூரணம் இது
சிற்செவி மடுத்து கேட்டிடுவோம்
     சிவன் அருள் பெற்றிடுவோம்

சந்தர் சோமயாஜிலு

No comments: