தில்லை தலத்து
திவ்ய மணியிது
தியானத்தில் ஆழ்த்திடும்
தெய்வீக மணியிது
சிதம்பர ஆலயத்தில்
ஒலிக்கும் ஓசையிது
சிங்கார எழில்மிகு
ஆலய மணியிது
அருட் பெருஞ்சோதி
அருளிய மணியிது
ஆன்ம அனுபவ உணர்வால்
அறிந்திடும் மணியிது
இறைநெறித் தந்திடும்
இசையொலி மணியிது
இரட்டை ஒலி மிகுந்த
இனிய மணியிது
வள்ளலார்க்கு அருளிய
வெள்ளி மணியிது
வார்த்தைக்கு எட்டாத
அனுபவ நிலையது
ஓங்கார நாதன்
ஒளிவருள் பொழியும்
ஒய்யார ஓசையிது
ஒப்பிலா மணியிது
சீவனை சிவமாக்கும்
சிகண்டி பூரணம் இது
சிற்செவி மடுத்து கேட்டிடுவோம்
சிவன் அருள் பெற்றிடுவோம்
சந்தர் சோமயாஜிலு
No comments:
Post a Comment