22.03.2019
நீரின்றி
உலகில்லை
பாரில் இன்று
நீரில்லை
வேரின்றி
மரமில்லை
மரமின்றி
மாரி இல்லை (நீ)
மாரி காலத்தே
பொழிவதில்லை
ஏரி குளம் ஆறு
நிரம்புவதில்லை
கார் மேக மழை
பொழியவே
மரம் பல
வளர்த்திடுவோம்
தூர் வாரி
ஏரி குளம்
சுத்தம்
காத்திடுவோம்
விரயம்
தவிர்த்திடுவோம்
சிக்கனமாய்
செலவிடுவோம்
சேமிப்பு
செய்திடுவோம்
நெகிழி
துறந்திடுவோம்
போர்க் கால
நடவடிக்கையாய்
துரிதமாய்
செயல்படுவோம்
ஊரே ஒன்று
திறண்டு
கடமையை
ஆற்றிடுவோம்
கருவேலம்
இழுத்ததுவே
குளிர்பானமும்
எடுத்ததுவே
மணல் கொள்ளையில்
தொலைந்ததுவே
சுத்தகரிப்பில்
இழந்ததுவே
புவி சூடாக்கல்
தடுத்திடுவோம்
கரி எரியாக்கல்
குறைத்திடுவோம்
வருங்காலம்
செழித்திடவே
நீர் வளம்
காத்திடுவோம்
சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்
No comments:
Post a Comment