சைவம் வளர்த்திட
சிவ சங்கரனாய்
வைணவம் தழைத்திட
அரி நாரணனாய்
பக்தி மார்க்கம்
தழைத்து ஓங்கிட
பக்தர்க்கு அருள்
புரிந்து நின்றனரே
அரியும் அரனும்
ஒன்றென நாம்
அறியும் வகையில்
இனிது நன்றே
அன்னை உமையவள் தவமிருந்தாள்
ஆடித் திங்களில்
அருளித் தந்தாள்
சங்கன் பதுமன்
ஐயம் தீர்த்திடவே
சங்கரனை வேண்டி
காட்சித் தந்திடவே
சங்கரி தேவி ஊசி
முனை தவமிருந்தாள்
சங்கர நாராயணனை
அருளித் தந்தனரே
கலியில் கிடைத்த
நல்ல வரமென்பர்
காணக் கண்கோடி
வேண்டும் என்பர்
கோமதி அம்பாள்
அருளித் தந்து நின்ற
கோலமிகு சங்கர
நாராயணன் தோற்றமே.
நெல்லலை தலத்தில்
அருளிய கோலமே
எல்லை இல்லா
பேரானந்தம் தந்திடுமே
இல்லை எனாது அருள் பொழிந்திடுமே
அல்லற் பிறவியும்
அறுத்து அருளிடுமே !
பாழும் வினைத்
தீர்த்து கரையேறிடவே
மாலும் அரனும்
இணைந்த கோலத்தினை
நாளும் பொழுதும்
சிந்தையில் நினைந்து
தாளைப் பற்றி பணிந்து போற்றுவோமே
சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்
No comments:
Post a Comment