Wednesday, May 20, 2020

தேர் வடம் இழுக்க



தேர் வடம் இழுத்திட
    வாரும் பிள்ளாய்
நடமாடும் கோவிலாய்
     பவனி வரும் (தே)

பூர்வ ஜன்ம புண்ணியப்
     பலனா....ய் கிட்டும்....
புவி மாந்தர் யாவர்க்கும்
     பேரருள் பொழியும் (தே)

கர்ம வினைகள் யாவும்
     ஆய களையும்
நோய் நொடி யாவும்
     நொடியில் விலகும்

வழக்குகள் நிறைந்த
     பிரச்சனை அகலும்
மனக் குழப்பங்கள் விலகி
     நிம்மதி நல்கும் (தே)

வெற்றி பல பல நம்
     வாழ்வில் குவியும்
சகல சௌபாக்கியங்கள்
     நாடி வந்து சேரும்

சிவ ராம தாஸன் 
     பணிந்து போற்றிடும்
காஞ்சி மஹான் மொழிந்த
     தெய்வ வாக்கின் படியே (தே)

சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்

No comments: