பத்ரா இல்லத்து
பசுமை தோட்டத்து
தளிர் கரம் தொட்ட
துளிர் பூவே
மலர் விழி காணும்
பூ மலரே
மங்கை குழல் சூடும்
மஞ்சள் மலரே
சிந்தூர வண்ணத்து
சிவப்பு ரோஜாவே
வெண்டாமரை கரத்தில்
வெண் மலரே
தூவானத்து மழை தந்த
தூது வளைப் பூவே
ஆத்யா தோட்டத்தில்
அழகிய பூவே
களித்திட பூத்த
கத்திரிப் பூவே
ஆத்யா கருங்குழலில்
குடியேற வா
சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்
No comments:
Post a Comment