பதி யின் பொருள்
பலவென அறிவோம்
கணவன் தலைவன்
அரசன் கடவுள்
வீடு கோவில் குரு
பூமி உறைவிடம் என (ப)
கணவன் தலைவன்
அரசன் கடவுளென
மனைவி என்றும்
தன் துணைவணை
தன் பதியாய்
கொண்டு உவந்தாள் (ப)
வீடு கோவில் குரு
பூமி உறைவிடமென
கணவன் என்றும்
தன் துணைவியை
தன் பதியாய்
கொண்டு உவந்தான் (ப)
மனைவி கணவனை
தன் பதியாய் கொண்டு
கணவன் மனைவியை
தன் பதியாய் கொண்டு
இருவரும் தம் துணையை
தம் பாதி தம் பதி
என தம்மை பகிர்ந்து
தம்பதியாய் வாழ்வரே (ப)
அயன் சிரசைத் தந்தான்
அரி மார்பைத் தந்தான்
அரன் பாதியைத் தந்தான்
நாம் நம்மைத் தந்தோம்
ஆண்டு மாறலாம் அகவை
கூடலாம் அன்பு மாறுமோ
தம்பதியர் தினத்தில்
வாழ்த்துக்கள் பரிமாறுவோம் (ப)
சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்
1 comment:
வாழ்த்துக்கள்
Post a Comment