ம்ருதுவாய் தீண்டிட
கரத்தில் தவழுவாள்
லாவகவாய் முத்தமிட
சிணுங்கி நிற்பாள்
உதட்டில் கவ்விட
மெல்லிய ஒலி எழுப்பி
வலிப்பது போல
பாவனை காட்டுவாள்
கரமது விளையாட
நெளிந்து வளைவாள்
சுவாசக் காற்றினில்
இன்னிசை தருவாள்
சிருங்கார ரஸமிகு
வெண்ணிற கோலவள்
கண்ணனுக்கு உவந்த
கோகுல கோபியருடன்
ஆயற் பாடியில் அந்திப்
பொழுதில் கரமேந்திட
ஆவினங்கள் சூழ்ந்திட
அதரத்தில் சுவைத்திட
ஜகத்தினை மயக்கிமன
மோகத்தில் ஆழ்த்துவாள்(ன்)
கண்ணனும் இவளால்
நாமம் பல கொண்டான்
வேணு கோபால முரளி
தரன் என நாமம் கொண்டான்
அவளது நாமமோ வெண்குழலே
ஊதும் புல்லாங்குழலே !
சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்
No comments:
Post a Comment