தொலை வானம்
தொடும் தூரம்
தொட முனையுமென
நீ நினைந்தால் !
தொடும் பூமி
தொலை தூரம்
தொட முனையாதென
நீ நினைந்தால் !
தடைக் கல்லே
படிக்கல்லே
விழும் புண்ணே
விழுப்புணனே
தளர்வடைந்தால்
தலை தடுமாறலாம்
தலை நிமிர்ந்தால்
தடை தாண்டலாம்
உலகு உன் கையில்
உன் மனம் நினைந்தால்
உலகின் மூலையில் நீ
உன் மனம் முடிந்தால் !
முயன்றால் முடியாதது
வையத்தில் ஏதும் இல்லை
முடியாதென முடங்கினால்
வெல்ல ஏதும் இல்லை
முயற்சியே திரு
வினையாக்கும்
திருவருளையேத்
தனதாக்கும் !
சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்
No comments:
Post a Comment