Friday, June 12, 2020

கடலே ! கடலலையே !






கடலே ! கடலலையே !
ஏனிந்த ஆரவாரம் !

உலகில் மூன்றில் இரு 
பங்கு கொண்டதாலோ
நீண்டு பரந்து விரிந்து
நிறைந்து நின்றதாலோ

கண் கவர் எழில் நீல
வண்ணம் கொண்டதாலோ
வான் எழில் மதி மடந்தை
உனைக் காண்பதாலோ (க)

சினம் வந்தால் சீற்றம்
கொண்டு எழுகின்றாய்
முழு மதி கண்டு உவகை 
கொண்டு பொங்குகிறாய்

மணற் கடற்கரை என்றால் 
கொஞ்சம் விருப்பமோ
ஆவலோடு துள்ளி நீந்தி
தொட்டு செல்கின்றாய் (க)

அதிகாலையிலும் அந்தி
வேளைப் பொழுதினிலும்
செங்கதிர் செல்வன் எழில்
ஆதவன் தொட்டு செல்கிறான்

மாந்தர் வேண்டிடும் உப்பை
அள்ளித் தருகின்றாய்
மாந்தர் சென்றிட தண்ணீர்
சாலையாய் மாறுகின்றாய் (க)

துருவத்தில் பனிக் கடலாய்
உறைந்து  நிற்கின்றாய்
தூய வெண் பாற்கடலில்
ஹரி உறைந்து நின்றான்

கொதிக்கும் கனல் தாங்காது
ஆவி ஆகி நிற்கின்றாய்
கொந்தளிக்கும் போது
சுனாமி ஆகி நின்றாய் (க)

சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்





1 comment: