உண்ணும் உணவும்
பருகும் நீரும்
உயிர் மூச்சுக் காற்றும்
இயற்கை துணையாலே
இயற்கை துணையின்றி
உயிர் வாழ இயலுமோ
இயற்கை கறை படியுமின்
வாழ வேறு வழியேது
நிலமெனும் மடந்தையைக்
காத்து நின்றிட
செழுமைப் பயிர்கள்
விளைந்து கொடுக்கும்
நீரெனும் மங்கையைக்
காத்து நின்றிட
தூயமிகு நீரிங்கு
உலகினில் நல்கும்
காற்றெனும் தூதனை
சுத்தமாய் வைப்போம்
மாசில்லா தூசில்லா
சுற்றுப்புறம் நல்கும்
ஓஸோன் வளையத்தை
காத்து நிற்போம்
சுற்றுப்புற சூழ்நிலையை
தூய்மையாய் வைப்போம்
மாசும் தூசும்
நிறைந்திருந்தால்
வையத்தில் வாழ்வது
எங்கனம் எங்கனம்
மதியும் புவியும்
அதி சூடானால்
வையத்தில் வாழ்வது
எங்கனம் எங்கனம்
மரம் செடி கொடி
பல வளர்ப்போம்
காடு வளர்த்து
வான் மழை காண்போம்
இனியன நல்கிடும்
இயற்கையைக் காப்போம்
இன்பமாய் வாழ்ந்து
இயற்கையை ரசிப்போம்
சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்
1 comment:
Super!
Post a Comment