பரந்து விரிந்த
பெருங்கடலாம்
நீலவான
பெருங்கடலில்
அணையா துருவ
ஒளி விளக்கில்
நீந்திச் செல்லும்
விண்மீன்கள்
சுழலும் சூரியன்
மேற்கில் மறையக்
கரையை தேடும்
முகில் அலைகள்
பொலிவை தரும்
வெண்ணிறத்தில்
வண்ண ஓவிய
எழில் முகமாய்
சந்தங்கள் நிறைந்த
இடி ஓசையுடன்
மழைச்சாரல் மென்
பூவாய் தூவிட
குளுமைத் தந்திடும்
கனி முகமாய்
வானவில் எனும்
பட்டுடையில்
பவனி வரும்
கடல் தேவதையே
கண்ணுக்கினிய
வெண்ணிலவே !
சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்
No comments:
Post a Comment