01 07 2020
மாதா பிதா குருவிற்கு
பின்னே தெய்வமென்பர்
மாதாவைக் காட்டி நின்ற
மருத்துவரும் தெய்வமே (ம)
தன்னுயிர் பாராது
தன்னலம் காணாது
மண்ணுலகு மாந்தர்
இன்னுயிர் காக்க
கண் விழி துஞ்சாத
மருத்துவர் குலமே
விண்ணுலகு உலவும்
விந்தைமிகு இறைவனே (ம)
நாடி தனைக் கண்டே
நோய் அறிவார்
விழி தனை விரித்தே
தீவிரம் அறிவார்
இருதயத் துடிப்பிலே
இன்னல் அறிவார்
வாய் நாவு கண்டு
நொடி காண்பார் (ம)
வரும் முன் மருந்து
காண்பரும் அவரே
வந்த பின் மருந்து
தருபவரும் அவரே
வாளால் அறுத்திடினும்
நலம் காண்பாரே
வாழ்வினைக் காத்திட
வழி காண்பாரே (ம)
இன்னுயிர் காக்கும்
தன்னலமற்ற சேவை
இந்நாளில் மாந்தர்க்கு
மண்ணுலகு தேவை
இரு கரம் கூப்புவோம்
சிரம் தனை தாழ்த்துவோம்
மனதார வாழ்த்துவோம்
மருத்துவரைப் போற்றுவோம்.
சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்
4 comments:
Arumai
Arumai
Excellent
Superb
Post a Comment