இரும்பு நெஞ்சை
ஈர்த்திடும் காந்த
விழிப் பார்வையோ !
செங்கோட்டையை
தகர்த்திடும் கூர்வேல்
விழிப் பார்வையோ !
வீர வேங்கையைக்
கவர்ந்திடும் மருண்ட
மான் விழிப் பார்வையோ !
தவ முனி ரிஷிகளும்
மயங்கிடும் கயல்
விழிப் பார்வையோ !
கார் இருளைப்
பொசுக்கிடும் சுடர்
விழிப் பார்வையோ !
கூடல் மா மதுரையை
எரித்திடும் கனல்
விழிப் பார்வையோ !
இளம் சேயைக்
கொஞ்சிடும் கருணை
விழிப் பார்வையோ !
மாந்தர் யாவரையும்
மயக்கிடும் எழில் ஓர
விழிப் பார்வையோ !
சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்
No comments:
Post a Comment