Saturday, June 6, 2020

பாவையின் பார்வை









இரும்பு நெஞ்சை 
ஈர்த்திடும் காந்த 
விழிப் பார்வையோ !

செங்கோட்டையை 
தகர்த்திடும் கூர்வேல் 
விழிப் பார்வையோ !

வீர வேங்கையைக் 
கவர்ந்திடும் மருண்ட 
மான் விழிப் பார்வையோ !

தவ முனி ரிஷிகளும் 
மயங்கிடும் கயல் 
விழிப் பார்வையோ !

கார் இருளைப் 
பொசுக்கிடும் சுடர் 
விழிப் பார்வையோ !

கூடல் மா மதுரையை 
எரித்திடும் கனல் 
விழிப் பார்வையோ !

இளம் சேயைக் 
கொஞ்சிடும் கருணை 
விழிப் பார்வையோ !

மாந்தர் யாவரையும் 
மயக்கிடும் எழில் ஓர 
விழிப் பார்வையோ !

சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்

No comments: