Monday, June 1, 2020

உலக பெற்றோர் தினம்


கருவினில் தாங்கி நின்று
கடும் வலி தாங்கி நின்று
கருத்தாய் காத்து நின்று
காசினியில் உயிர் தந்த

தன் உதிரத்தை பாலாக்கி
தீஞ்சுவையாய் ஈந்து நின்று
தாலாட்டு பல பாடி நின்று
தியாகம் பல புரிந்து நின்று

தாயன்பு பாசமும் காட்டியே 
தன்னுயிராய் காத்து நிற்கும்
தாயவள் இல்லையெனில்
தனயன் தான் நான் ஏது ?

உதித்தற்கு காரணமாகி
உயரிய உருவும் தந்து
உயிரும் தந்து நின்று
உயிராய் காத்து நின்று

கண்ணும் கருத்துமாய்
காலம் முழுதும் காத்து
கல்விக் கண் தந்து நின்று
கடமை செவ்வனே புரிந்து

அறிவும் பண்பும் கொடுத்து
ஆளாக்கி தந்து நின்ற
அப்பா ஒருவரில்லை யெனில்
அருமைந்தன் நான் ஏது !

ஏழேழு பிறவி எடுத்தினும்
எத்துணை தொண்டு புரிந்தினும்
தீராக் கடன் தீர்க்க இயலுமோ உயர் தாய் தந்தை பெற்றோரிடம் !

பெற்றோர் தின வாழ்த்துக்கள் !


சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்



2 comments:

sowmya said...

Superb

Unknown said...

வெகு அருமை