சிறு விதையென
தூர எறிந்திடினும்
புவியில் ஆழ ஆழ
புதைந்து போயிடினும்
விதையில் உதித்து
வேரூன்றி வளர்ந்து
செடியாகி கொடியாகி
நெடு மரமாகி நின்றேன்
பச்சை இலை துளிர்த்து
வெள்ளைப் பூ பூத்து
காயாகிக் கனிந்து நான் சுவைக் கனி தந்தேன்
அடர்ந்து மலர்ந்து நின்று
படர்ந்து விரிந்து நின்றேன்
கண்ணுக்கினிய விருந்து
படைத்து குளுமை தந்தேன்
சுடரொளி கதிர் வீசும்
ஞாயிறு கதிர் தடுத்து
வெம்மை தணித்து நின்று
குளுமை நிழல் தந்தேன்
தென்றல் வீசும் பொழுதே
மெல்ல ஆடி நின்றேன்
மழைச் சாரல் பொழியவே
ஒதுங்க இடம் தந்தேன்
விதை வீழ்ந்து போயிடினும்
விருட்சமாய் வளர்ந்த நான்
விஸ்வரூபமாய் ஓங்கி நான்
வேண்டும் நிழல் தந்தேன்
மடிந்த பின் எந்தன் உடல்
யாவும் உந்தன் அடுப்பங் கரையில் நெருப்பு தார
வந்து உதவுவேன் கண்ணா
இன்னா செய்தாரை ஒருத்தல்
எனும் குறள் மொழிக்கேற்ப
இனியன யாவும் தந்தேன் மரம்
எனும் நாமம் கொண்டேன்.
சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்
No comments:
Post a Comment