Tuesday, May 19, 2020

பகவத் கீதா ஜெயந்தி


பாரதப் போரினில்
     உதித்த கீதமே
பார்த்தனுக்கு அருளிய
     இனிய கீதமே

பகவான் பகர்ந்த
     கீதம் இன்றே
பாரதத்தின் புண்ணிய
     கீதம் இதுவே

நவ இரு யோகம்
     கொண்டது இதுவே
நவ ரத்தின பூஷண
     கீதம் இதுவே

கர்ம யோகம்
     பக்தி யோகம்
ஞான யோகம்
     மொழிந்திடும் கீதமே

கௌந்தேயன் வேதனை
     விலக்கும் விஷாத யோகம்
கோட்பாடுகள் உரைத்திடும்
     சாங்கிய யோகம்

செயல் அறம் செப்பிடும்
     கர்ம யோகம்
அறிவறம் உரைத்திடும் ஞான 
     கர்ம சந்யாஸ யோகம்

துறவின் அறம் கூறிடும்
     சந்யாஸ யோகம்
தன்னடக்கம் அறம் செப்பிடும்
     தியான யோகம்

பகுத்தறிவு அறம் விளக்கும்
     ஞான விஞ்ஞான யோகம்
பரம்பொருளின் அர்ப்பணமாய்
     அக்ஷர பிரம்ம யோகம்

அறிவு பெரும்புதிரின் அறமாய்
     ராஜா வித்யா ராஜ குஹ்ய யோகம்
தெய்வீக மாட்சிமை அறமாய்
     விபூதி விஸ்தார யோகம்

அண்டப் பெரு வடிவுக் காட்சியாய்
     விஸ்வரூப தரிசன யோகம்
நம்பிக்கையறம் செப்பிடும்
     பாகவத பக்தி யோகம்

பொருள் ஆத்ம பிரிவினை அறமாய்
     க்ஷேத்ர க்ஷேத்ரக்ஞ விபாக யோகம்
குணப் பிரிவினை அறமாய்
     குணத்ரய விபாக யோகம்

பரம நிலை அடையும் அறமாய்
     புருஷோத்தம யோகம்
தெய்வ அசுரத் தன்மை செப்பும்
     தெய்வாசுர சம்பத் விபாக யோகம்

மூவித நம்பிக்கை அறமாய்
     சிரத்தாதர்ய விபாக யோகம்
விடுதலை துறவின் அறமாய்
     மோக்ஷ சந்நியாச யோகம்

மானுடர் வாழ்வு   உய்க்க உரைத்து
     பாதை காட்டிடும் கீதை
பகவான் கிருஷ்ணர் அருளிய ஸ்ரீமத்
     பகவத் கீதை போற்றி போற்றி

சந்தர் சோமயாஜிலு

No comments: