Friday, May 15, 2020

மே தினம் தொழிலாளர் தினம் 1


நிதம் உழைத்து

வியர்வை சிந்தி

நிலத்தில் விழும்

நெற்றி வியர்வையில்

நில மடந்தையும்

நெகிழ்ந்து நிற்பாள்

நினைந்து உவந்து

பெருமை கொள்வாள் !

 

கடமை உணர்வுடன்

உழைத்து நின்று

கண்ணியம் குன்றாது

காத்து நின்று

கட்டுப்பாடு நிறைந்து

வாழ்ந்து நின்று

கடைசி வரையில்

உழைக்கும் வர்க்கம் !

 

உழைத்து நின்று

ஊன் உண்ணும்

உழைக்கும் வர்க்கம்

என  பெருமையுடனே

உலகு முழுதும்

கொண்டாடி மகிழும்

உன்னத தினமே

உழைப்பாளர் தினம் !

 

தொழில் தனை

தெய்வம் என

தொழுது நின்று

தலை நிமிர்ந்து

தொன்று தொட்டு

உழைத்து நின்ற

தொழிலாளர் தினம்

இத் தினமே தினமே !

 

உரிமைக் குரல்

எழுப்பிய தினம்

உணர்வு தனைக்

காட்டிய தினம்

உரிய நேரத்தை

நிர்ணயித்த தினம்

உழைக்கும் வர்க்கத்தின்

எழுச்சி தினம் !

 

மேனி எங்கும்

சிலிர்த்து நின்று

மேன்மக்கள் உழைப்பை

போற்றி நின்று

மேவிய தினமாய்

போற்றி மகிழும்

மே தினம் தனைப்

போற்றிடுவோம் !

 

சந்தர் சோமயாஜிலு (@)

சிவ ராம  தாஸன்


No comments: