நிதம் உழைத்து
வியர்வை சிந்தி
நிலத்தில் விழும்
நெற்றி வியர்வையில்
நில மடந்தையும்
நெகிழ்ந்து நிற்பாள்
நினைந்து உவந்து
பெருமை கொள்வாள் !
கடமை உணர்வுடன்
உழைத்து நின்று
கண்ணியம் குன்றாது
காத்து நின்று
கட்டுப்பாடு நிறைந்து
வாழ்ந்து நின்று
கடைசி வரையில்
உழைக்கும் வர்க்கம் !
உழைத்து நின்று
ஊன் உண்ணும்
உழைக்கும் வர்க்கம்
என பெருமையுடனே
உலகு முழுதும்
கொண்டாடி மகிழும்
உன்னத தினமே
உழைப்பாளர் தினம் !
தொழில் தனை
தெய்வம் என
தொழுது நின்று
தலை நிமிர்ந்து
தொன்று தொட்டு
உழைத்து நின்ற
தொழிலாளர் தினம்
இத் தினமே தினமே !
உரிமைக் குரல்
எழுப்பிய தினம்
உணர்வு தனைக்
காட்டிய தினம்
உரிய நேரத்தை
நிர்ணயித்த தினம்
உழைக்கும் வர்க்கத்தின்
எழுச்சி தினம் !
மேனி எங்கும்
சிலிர்த்து நின்று
மேன்மக்கள் உழைப்பை
போற்றி நின்று
மேவிய தினமாய்
போற்றி மகிழும்
மே தினம் தனைப்
போற்றிடுவோம் !
சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்
No comments:
Post a Comment