சிந்தூர சிவப்பு
எழுது மை நீலம்
கிளியின் பச்சை
மங்கள மஞ்சள்
கத்திரி ஊதா
தித்திக்கும் ஆரஞ்சு
கரு நீலம் கலந்த
கலவையாய்
வண்ண மயமான
வடிவு தனிலே
வண்ண மழைத்
துளியின் எதிரொலியாய்
வண்ண ஏழு
நிறங்கள் உடனே
வண்ணக் காட்சி
தருது இங்கே
மந்திர மாயப்
புன்னகை தானோ
சந்திரப் பொலிவுனும்
மின்னிடும் அழகோ
இந்திரன் அனுப்பிய
தனுசு இதுவோ
வந்திறங்கியது
நீல வானத்திலே
கண்ணுக்கு இனிய
காட்சி தனை
மண்ணுலகு மாந்தர்
கண்டு களித்தட
விண்ணுலகு தாண்டி
வந்த வில்தனை
மண்ணுலகில் கணை
தொடுப்பார் யாரோ?
சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்
No comments:
Post a Comment