வசந்த கால நேரத்திலே
தென்றலாய் தீண்டி சென்றிட்ட
கார்கால மாத நேரத்திலே
சாரலாய் நனைத்து சென்றிட்ட
ஐப்பசி மாத காலத்திலே
மத்தாப்பாய் சிரித்து சென்றிட்ட
கார்த்திகை மாத காலத்திலே
தீப ஒளியாய் திகழ்ந்திட்ட
மார்கழி மாத காலத்திலே
பனி மேக மூட்டமாய் வந்திட்ட
அதிகாலை கால நேரத்திலே
கதிரவனாய் தோன்றி ஜொலிதிட்ட
காரிருள் கால வானத்திலே
நிலவாய் வந்த தேவதையே
தை மாத பொன் நேரத்திலே
மாலை இட வருவாயா?
சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்
No comments:
Post a Comment