வருவாய் வருவாயென
நினைத்திருந்தோம்
பொழிவாய் பொழிவாயென
காத்திருந்தோம்
தருவாய் வளம் தருவாயென
வாழ்ந்திருந்தோம்
வாராதா மழை வாராதா
யெனப் பார்த்திருந்தோம்
வந்தது வந்தாய் ஒரு
துணையுடன் வந்தாய்
வர்தா புயலின்
துணையுடன் வந்தாய்
சீற்றம் மிகுந்து
பாய்ந்து வந்தாய்
சூறாவளிக் காற்றுடன்
சுழன்று வந்தாய்
மும்மாதம் பொழிந்து
முறையுடன் வந்தால்
போகம் மூவென
நல்வளம் காண்போம்
முறை தவறி வந்திங்கே
கொட்டித் தீர்த்தால்
வேகம் கண்டிங்கு
எங்கனம் செல்வோம்?
மரங்களை வளர்த்து
இயற்கை காத்தால்
மழை பொழிந்திட
வளம் காண்பென்பர்
மரங்களை சாய்த்து
வேரொடு களைந்தால்
மழையே நாங்கள்
வளம் காண்பதெப்படி?
சாலையும் கெட்டது
சோலையும் கெட்டது
வேலையும் கெட்டது
உன் வேகத்தாலே
பொருள் சேதமோ
உயிர் சேதமோ பலவே
தாளா வேதனை
பாரா சோதனை பலவே
கோபம் ஏனோ ஏனோ
சீற்றம் ஏனோ ஏனோ
வேகம் ஏனோ ஏனோ கோர
தாண்டவம் தான் ஏனோ
இயல்பு வாழ்வினை
கெடுத்தது ஏனோ ஏனோ
தமிழகத்தைப் புரட்டி
போட்டது ஏனோ ஏனோ
புயலொடு வந்து
பேயெனப் பொழிந்து
சீர்வளம் கெட்டிட
துணை போகாதே
சில்லென காற்றுடன்
மெல்லென பொழிந்து
சீர் வளம் தந்திட்டு
நல்லன புரிவாய்.
சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்
No comments:
Post a Comment