தங்கத் தமிழ்நாடு இங்கே
வங்கப் புயல் தனிலே
மங்கிப் போனது இங்கே
கங்கை நதி போலே
எங்கினும் வெள்ளம் இங்கே
தங்கும் குடில் யாவும்
தண்ணீரில் மிதக்குது இங்கே
தன்னிகரா நிலை வேண்டி
தன்னிறைவு பெற்றிடவே
தண்ணீரை இரைந்தோமே
தண்ணீரில் மிதந்தோமே
திண்ணயில் அமர்ந்த வண்ணம்
தண்ணீர் நிலை ஆராய்ந்தோம்
திண்ணையே மூழ்குமளவு
தண்ணீரும் நிறைந்தது இப்போ
சாலைகள் ஒவ்வொன்றும்
கால்வாயாய் மாறியதிங்கே
கரிகாலன் கட்டிய பல
கால்வாயும் தோற்றதிங்கே
அங்கிங்கு எனாதபடி
ஆயிரம் சல்லடை சாலையடி
அங்கிங்கு எனாதபடி
ஆயிரம் குட்டைகள் தோன்றியதடி
என்று தணியும் இந்த
புயலின் வேகம்
என்று மறையும் இந்த
மழை தரும் மேகம்
என்று வடியும் இந்த
மழை நீர் தேக்கம்
என்று முடியும் இந்த
மானுடர் ஏக்கம்
சாலை தனை மேம்படுத்தி
பாலம் பல கட்டி வைத்தால்
மழை தனை சேமித்து
நீர் நீக்கம் அமைத்து விட்டால்
வழி நெடுக மரம் வைத்து
எழிலொரு வழி செய்தால்
சிங்காரச் சென்னை இங்கே
செந்தமிழ்நாடு பெற்றிடுமே
சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்
No comments:
Post a Comment