ஓவியக் கலையைப்
போற்றும் தினமிதுவே
ஓவியக் கலைஞரைப்
போற்றும் தினமிதுவே (ஓ)
புள்ளியில் துவங்கி
நெளிவு வளைவு
சுழியுடனே மனங்கவர்
கோலம் தந்திடும் (ஓ)
வண்ண வண்ண
நிறம் தனிலே
கை வண்ணத்
திறம் தனிலே
தூரிகை ஏந்தியே
காவியம் படைத்து
பேருவகை தந்திடும்
பேரெழில் வண்ண (ஓ)
எண்ணத்தில் மிளிரும்
வண்ணத்தில் ஒளிரும்
செயற்கை பொருளாலே
இயற்கை காட்டிடும்
பேசும் படம் போல
பேசும் கண் போல
உயிரோவியம் தனையே
சுவரொட்டியில் காட்டும் (ஓ)
சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்
No comments:
Post a Comment