சந்தர் சோமயாஜிலு (@) சிவ ராம தாஸனின் செந்தமிழ் கவிதைகள்
கல்லாக இருந்திடும்
கலையாக மாறிடும்
அழகை தான் ஒப்பிட
கவிஞனும் செப்பிடும்
கள்வரும் கன்னமிடும்
காக்கையும் அமர்ந்திடும்
சிற்பியும் வடித்திடும்
அன்பரும் வழிபடும்
சிருங்கார வடிவினில்
சிலையாக வந்தனையே
சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்
Post a Comment
No comments:
Post a Comment