தோலை உரித்தும்
துவள வில்லை
கயிற்றால் கட்டியும்
கத்த வில்லை
இருபுறம் தட்டியும்
மருள வில்லை
அடித்த போதும்
அழவே இல்லை
மிஸ்ரம் திஸ்ரம்
பரண் சதுஸ்ரம்
ஸ்ருதி சங்கீரணம்
கண்டம் நடைக்கு
லயம் தந்தான்
தாளம் தந்தான்
ஸ்வரம் தந்தான் நல்
இசை தந்தான்
இன்னிசை கீதத்திற்கு
துணை நின்றான்
இயலிசை நாடகத்திற்கு
இணை நின்றான்
இனிய பைந்தமிழுக்கு
துணை நின்றான்
இந்திய பெருமையை
நாட்டி நின்றான்
சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்
No comments:
Post a Comment