Friday, May 15, 2020

மத்தளமோ தவிலோ மிருதங்கமோ

தோலை உரித்தும்

    துவள வில்லை

கயிற்றால் கட்டியும்

    கத்த வில்லை

இருபுறம் தட்டியும்

    மருள வில்லை

அடித்த போதும்

    அழவே இல்லை

 

மிஸ்ரம் திஸ்ரம்

    பரண் சதுஸ்ரம்

ஸ்ருதி சங்கீரணம்

    கண்டம் நடைக்கு

லயம் தந்தான்

    தாளம் தந்தான்

ஸ்வரம் தந்தான் நல்

    இசை தந்தான்

 

இன்னிசை கீதத்திற்கு

    துணை நின்றான்

இயலிசை நாடகத்திற்கு

    இணை நின்றான்

இனிய பைந்தமிழுக்கு

    துணை நின்றான்

இந்திய பெருமையை

    நாட்டி நின்றான்

 

சந்தர் சோமயாஜிலு (@)

சிவ ராம தாஸன்

No comments: