ஒற்றைச் சிவப்பு ரோஜாப் பூவிலே
ஒருமித்தக் காதலைப் பகிர்ந்திடவே
ஒயிலான அந்திப் பொழுதினிலே
ஒன்றாய் கூடி மகிழும் தினம் இதுவே.
விழியும் விழியும் காணிடும்
மொழி மௌனத்தில் பேசிடும்
வாழிய வாழிய காதலென்று
அழியாக் காதல் தினம் இதுவே.
காதல் காதல் காதலென
காதல் ஜபம் புரிந்திடும்
காதல் புரிந்திட கூடிடும்
காதலர் போற்றிடும் தினம் இதுவே.
மூன்று வார்த்தை தனை
மூச்சுக்கு மூச்சுக்கு செப்பிடும்
முதலாம் சந்திப்பை நினைத்திடும்
முதன்மை தினமாய் போற்றும் தினம் இதுவே.
உலகமே இதுதான் என எண்ணிடும்
உலகம் ஊர் தனை மறந்திடும்
உல்லாசமாய் இருந்து மகிழ்ந்திடும்
உலகமே கொண்டாடும் தினம் இதுவே.
சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்
No comments:
Post a Comment