கொரானோ வைரஸ்
யாதென அறிவாய்
ஆட்கொல்லி அபாய
நுண்ணுயிர் கிருமி அதுவே
சீமை சீன தேசத்தில்
உதித்த அபாயம் இதுவே
விடை ஏதும் காணா
கொல்லிக் கிருமி இதுவே
ஆறிரண்டு மணித்துளி
வாழ்வு கொண்டிடும்
அபாயம் நிறைந்ததொரு
கிருமி இதுவன்றோ
கூட்டம் மிகு நிறை
இடம் தனை தவிர்ப்போம்
நிலமை அறிந்து நின்று
புத்தியுடன் நடப்போம்
கரம் சிரம் முகம் தனை
வழலை நீரால் கழுவி
சுத்தமாய் பத்திரமாய்
கவனமாய் இருப்போம்
அரசு ஊரடங்கு சமூக
விலகல் காத்து நின்று
சுயக் கட்டுப்பாட்டுடன்
வெற்றிக் கண்டிடுவோம்
சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்
No comments:
Post a Comment