தேவதையே தேவ லோக
தேவதையே ! எந்தன்
இதயம் கவர் கன்னி எழில்
மிகு தேவ மனோ ஹரியே ! (தே)
உந்தன் வசம் நான் வீழ்ந்தேன்
எந்தன் குடில் வாசம் நீ வா
மோகனச் சுவை இதழ் விரித்து
மோகனப் புன்னகை தா தா
மது வந்தி இதழ் சுவை பருகிட
மனோகரியே அருகில் வா
மோகன ராகம் பாடிடுவோம்
மோகனன் எனை வரித்திட வா(தே)
எந்தன் வசந்தாவே.. நீ வா
வசந்த வாழ்வினை நீ தா...
எந்தன் இதய தர்பாரில் வீற்றியே
அல்லி ராஜ்யம் புரிய வா
எந்தன் உள்ளன்பை நீ காணடா
காதல் ஆழம் தனை நீ பாரடா
எந்தன் நெஞ்சின் சுவடினைப் பாரடி
ரஞ்சனி உன் பெயரினைக் காணடி (தே)
எந்தன் சிந்தையை மயக்கிய
சிந்தாமணியே மோகினியே
கீ....தப் பிரியன் நா....னடி அழகே
சங்கீதப் பிரியன் நா....நா...னடி
ஷன்முகப் பிரியா நானடா ஹே..
ஷணமுகா உன் பிரியை நானடா
நாட்டை ஆண்டிடும் மா மன்னவா
நாணினை கழுத்தில் சூட வா (தே)
ஆனந்த பைரவியே வா...
அழகு பதுமையே வா...
ஆனந்த ராகம் மீட்டிட வா
ஆனந்த வாழ்வினை தர வா
மஞ்சரி நானுந்தன் தஞ்சம்
அடைந்தேன் குறிஞ்சி
மலரினை நீ சூட வா வா
மஞ்சம் பகிர்ந்திட நீ வா. (தே)
சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்
No comments:
Post a Comment