Wednesday, May 20, 2020

நம்மாழ்வார்


அவதரித்தாரே அவனியில்
   அவதரித்தாரே 
சடகோப  நம்மாழ்வார்
   அவதரித்தாரே 

வைகாசி திங்களில்
   விசாக நட்சத்திரத்தில்
வையகம் உய்த்திடவே
   வைணவம் தழைத்திடவே (அ)

திரு மகள் உறை மார்பன்
   திருச்செவி மடுத்திட
தீந்தமிழ் மொழி தனிலே
   திருவாய் மொழி தந்திட 

தாமிரபரணி நதிக்கரையில்
   ஆழ்வார் திரு நகரில்
திருக்குருகூர் தலம் தனில்
   கரி மாறனாய் அவர் (அ)

வேதம் தமிழ்   
   செய்த மாறனாய்
குழந்தை முனி 
   ஞானபிரானாய்

மெய் ஞானக்கவி  
   பராங்குசனாய்
பவ ரோக 
   பண்டிதனாய் (அ)

சாம வேத 
   சார சாகரமாய்
திராவிட தமிழ்   
   வேதமாய்

ஆயிரம் பாசுர 
   தேனமுதாய்
பிரபந்த திருவாய் 
   மொழி தந்திட (அ)

திருவந்தாதி 
   திருவாசிரியம்
திருவிருத்தம் 
   தந்தருளவே

குமரித் துறைவன்   
   பெரியனாய்
நாவீரர் வகுளா   
   பரணனாய் (அ)

காரியார் உடைய   
   நங்கை சுதனாய்
கம்ப சடகோப  
   அந்தாதி நாதனாய்

ஸ்ரீ மதுர கவி 
   ஆழ்வார் குருவாய்
கவி சிவ ராம 
   தாஸன் பணிந்திட (அ)

சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்

No comments: