புவனத்தை படைத்த
பரமன் இறைவன்
புத்தம் புது புதிய
புதியதொரு
புத்தாண்டு 2018
புத்தகம் ஓன்றை
புதிதாய் படைத்தான்
புவியுலகில் இன்று
பக்கங்கள் முந்நூற்றி
அறுபத்தி ஐந்து
பங்கய மலர் போல
நறுமணம் வீசிடும்
பக்கங்கள் புரட்டிட
புரட்டிட புதிய
சிந்தனகள் மனதில்
உதிக்கட்டுமே
பக்கங்கள் விரிந்திட
விரிந்திட நமது
எண்ணங்கள் பரந்து
விரியட்டுமே
நல்லன யாவும் பல
நல்கிடும் நன்றே
நினைத்தன யாவும்
கைகூடும் நன்றே
நோய் நொடி இல்லா
சுக வாழ்வு தந்திடும்
நீங்காச் செல்வங்கள்
நாடி வரும் இனிதே
புதியன நல்கிடும்
புது பரிமாணம் தந்திடும்
புதிய வளர்ச்சி தந்திடும்
புதிய இலக்கு எட்டிடும்
புத்துணர்ச்சி தந்திடும்
புதுமை நிறைந்திடும்
புன்னகைப் பூத்திடும்
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !
சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்
No comments:
Post a Comment