இருக்கையிலே அதன்
அருமை அறியாதது
இருக்கையிலே அதன்
பெருமை தெரியாதது
இல்லாது இழக்கையில்
இயலாத நிலமையது
இன்னாரால் நிரப்ப
இயலாத வெற்றிடமிது
இழக்கையில் இதயம்
துடிக்கும் துயரிது
இல்லாமை வெறுமை
உணரும் தருணமிது
ஈடு செய்ய இயலாத
மீண்டும் வரலாகாத
உண்மையின் தத்துவம்
உணரும் தருணமிது
சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்
No comments:
Post a Comment