Saturday, May 16, 2020

இல்லாமை




இருக்கையிலே அதன்

அருமை அறியாதது

இருக்கையிலே அதன்

பெருமை தெரியாதது

 

இல்லாது இழக்கையில்

இயலாத நிலமையது

இன்னாரால் நிரப்ப

இயலாத வெற்றிடமிது

 

இழக்கையில் இதயம்

துடிக்கும் துயரிது

இல்லாமை வெறுமை

உணரும் தருணமிது

 

ஈடு செய்ய இயலாத

மீண்டும் வரலாகாத

உண்மையின் தத்துவம்

உணரும் தருணமிது

 

சந்தர் சோமயாஜிலு (@)

சிவ ராம தாஸன்



No comments: