Sunday, May 17, 2020

நாணம்



பெண்மைக்கு உரியதென்பர் 
இயல்பான குணமென்பர்

பதிவிரதைக்குரிய குணமதில் 
நான்கினில் ஒன்றென்பர்

பொய்யுரையில் அகப்படவே
நால்விதமாய் கோணி நிற்பர்

ஆடவர்க்கும் சில பொழுதில்
வந்திடும் குணம் என்பர்

புகழுரையைக் கேட்ட பின்
புன்முறுவலுடன் பூக்குமென்பர்

நெஞ்சமத்தில் பதற்றம்  தரும்
அச்சத்தை துணை கொள்ளும்

முகமதை சிவக்கச் செய்யும்
தம்மையே இகழச் செய்யும்

பாவையின்  இளம் பருவத்தே
பூத்திடும் நாணம் அன்றோ !


சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்

No comments: