அயிலை ஏந்தும்
மயிலோன் இங்கே
தையல் வள்ளியை
ஏந்தி நின்றான்
கிளிகள் இரண்டும்
கிளைதனில் கொஞ்ச
வஞ்சியை அழகன்
கொஞ்சி நின்றான்
இரவில் நிலவொளி
பொலிவுடன் உலவ
நிலவு பொலிவோன்
குலாவி நின்றான்
செவ்வானம் இங்கே
நாணம் மிகுந்து
சிரம் தனை சாய்த்து
குனிந்து நின்றது
செந்தில் குமரனின்
செஞ்சுடர் நிறத்தில்
வண்ணம் கண்டு நின்று
தன்னொளி இழந்தது
குஞ்சரி மணாளனை
நெஞ்சினில் நினைத்து
தஞ்சம் புகுந்திடின்
அஞ்சேலென அருளிடுவான்
அருவி நீர் பொழிவது போல
அருள் மழை பொழிவான்
அஞ்சனை சிவைக் குமாரன்
அழகு மிகு திருக்குமரன்....
சந்தர் சோமயாஜிலு(@)
சிவ ராம தாஸன்
No comments:
Post a Comment