Thursday, May 21, 2020

விழியின் மொழி



விழியின் மொழிக்கு
ஈடு உண்டோ பேசும்
விழியின் பொருளுக்கு
நிகர் உண்டோ கண்ணே (வி)

கரத்தின் தொடுதலால்
காட்டும் அக்கறை
மொழிந்திடும் சொல்லினும்
பெரிது அன்றோ ஆயினும்

இனிய சொல்லினால்
இதயத்தை தொட்டு நின்று
நயனத்தில் ஈரம் தருமோயின்
சாலச் சிறந்தது அதுவன்றோ 

விழியால் பேசியும் கரத்தால் 
அக்கறையும் இனிய சொல்லில் 
அன்பினால் இதயம் தொட்டு விடு
விழியில் ஈரம் காண்பாயே

சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்

No comments: