Friday, May 15, 2020

பொறாமை


ஆமை புகுந்த வீட்டினில்

அமைதி என்றும் விளங்காதே

பொறாமை நிலவும் மனதினில்

அமைதி என்றும் நிலவாதே

 

பொறுமை எனும் வேள்விமிலே

வென்றவர் பல கோடி

பொறாமை ஏனும் தீயினிலே

வெந்தவர் பல கோடி

 

கருமை மொட்டு மனதினிலே

பூத்துக் குலுங்கிடும் அன்றோ

சிறுமை குணத்தைக் காட்டி

வாசம் தந்திடும் அன்றோ

 

கல்லாமையால் வரும மடமையன்றோ

இல்லாமையால் தோன்றும் மதி

இல்லாமையால் தோன்றும் திறன்

இல்லாமையாலும் தோன்றுமன்றோ

 

இயலாமையால் பொருமுவதன்றோ

முயலாமையால் முனகுவதன்றோ

வறுமையிலும் பொறாமையிலும்

அமைதி என்றும் நிலவாதே

 

பொறாமை போட்டி என்றும்

சேர்ந்தே வரும் அன்றோ

பொறாமை விடுத்துப்

போட்டியை எதிர் கொண்டால்

 

திறன் தனை மேம்படுத்தித்

திறமையை வெளிக்காட்டி

துவளாது துவண்டாது

வல்லமையால் வெல்வோமே.

 

சந்தர் சோமயாஜிலு (@)

சிவ ராம தாஸன்


No comments: