ஆமை புகுந்த வீட்டினில்
அமைதி என்றும் விளங்காதே
பொறாமை நிலவும் மனதினில்
அமைதி என்றும் நிலவாதே
பொறுமை எனும் வேள்விமிலே
வென்றவர் பல கோடி
பொறாமை ஏனும் தீயினிலே
வெந்தவர் பல கோடி
கருமை மொட்டு மனதினிலே
பூத்துக் குலுங்கிடும் அன்றோ
சிறுமை குணத்தைக் காட்டி
வாசம் தந்திடும் அன்றோ
கல்லாமையால் வரும மடமையன்றோ
இல்லாமையால் தோன்றும் மதி
இல்லாமையால் தோன்றும் திறன்
இல்லாமையாலும் தோன்றுமன்றோ
இயலாமையால் பொருமுவதன்றோ
முயலாமையால் முனகுவதன்றோ
வறுமையிலும் பொறாமையிலும்
அமைதி என்றும் நிலவாதே
பொறாமை போட்டி என்றும்
சேர்ந்தே வரும் அன்றோ
பொறாமை விடுத்துப்
போட்டியை எதிர் கொண்டால்
திறன் தனை மேம்படுத்தித்
திறமையை வெளிக்காட்டி
துவளாது துவண்டாது
வல்லமையால் வெல்வோமே.
சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்
No comments:
Post a Comment