ஈரைந்து தீய குணம்
அழித்து நிற்கும்
தினமே தஸரா என்னும்
இனிய நன்னாளே (ஈ)
அகங்காரம் அறவே விடுத்து
கொடூரம் தூர ஒதுக்கி
அநியாயம் புரியாதிருந்து
காமத்தில் வீழாதிருந்து
கோபத்தை தணித்து வைத்து
பேராசை இல்லாதிருந்து
மடமையை கொளுத்தி நின்று
பொறாமை கொள்ளா திருந்து
மோகமதில் மூழ்காதிருந்து
சுயநலம் ஒதுக்கி வைத்திட
சிவ ராம தாஸன் மொழிந்த
பத்தினை அறவே ஒதுக்க
காணும் நாளெல்லாம் தசராவே
காண்பதெல்லாம் நலம் தானே
கலியுகம் தனில் சுகம் தானே
களிப்பது நம் உள்ளம் தானே (ஈ)
சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்

No comments:
Post a Comment