சினம் தவிர்ப்பாய் மனமே
சினம் தவிர்ப்பாய் நீ (சி)
தீ பற்றி எரிகையில்
பற்றி எரிந்திட
காரணம் தேடாது
அணைப்பது போல
சினம் கொண்ட பொழுது
மேலும் சினம் மூட்டாது
வாதாடாது நின்று
குளிரித்திட வேண்டும் (சி)
நிலைமை முற்றாது
மோசம் நிலவாது
நிலவின் குளுமை போல
மாற்றிட வேண்டும்
நல்லன சொல்லி
உற்சாகம் மூட்டி
நல்லெண்ணம் உதிக்க
வேண்டும் மனமே (சி)
சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்
No comments:
Post a Comment