மழையே ! வான் மழையே ! என்
மனங்கவர் மழையே (ம)
சில்லென்று வந்தாய் நீ
சிலிர்க்க வைத்தாய் நீ
சல சல வென வந்தாய் நீ
சர சரவென பொழிந்தாய் நீ (ம)
கரு முகில் கறுத்து நிற்க
காரிருள் சூழ்ந்து நிற்க என்
கரு விழி பூத்து நிற்க
கனிந்து பொழிந்தாய் நீ (ம)
மின்னல் தேவதை ஒளி தந்திட
இடி தேவன் ஒலி முழங்கிட
மாந்தர் மனம் குளிர்ந்திட
மதுரமாய் வந்தாய் நீ (ம)
கார் காலத்தே வந்தாய் நீ
கருத்துடன் பொழிந்தாய் நீ
கலங்கி நிற்கும் மாந்தர் தம்
கண்ணீர் துடைத்தாய் நீ (ம)
சூழட்டும் கரு மேக மூட்டம்
கொட்டட்டும் வான் நீரோட்டம்
நனையட்டும் புவி மேலோட்டம்
நீங்கிட்டும் மானுடர் மன வாட்டம் (ம)
சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்
No comments:
Post a Comment