மையல் கொண்டேன்
உன்னிடம் நான் !
மதி முக எழில் மிகு
மங்கையவளே (மை)
மலர் விழி தனிலே
மயங்கி நின்றேன் என்
மனதினை உன்னிடம்
பறி கொடுத்தேன் நின்
மென் கரம் பற்றிட
கண் மலர்வாய்
மௌன மொழி தனில்
சம்மதம் தருவாய் (மை)
காதல் என்னும்
அகல் விளக்கில்
திரியாய் நுனி தனில்
காத்திருந்தேன்
நெய்யாய் மனதினை
உருக்கி நின்றேன்
தீபத்தினை ஏற்றி நீ
ஒளி தனை தா ! (மை)
மெல்லிடை அசைந்து
தென்றலாய் வா வா
என் வாழ்வில் நீ ஒரு
வசந்தம் தா தா
வைகறை விடியலாய்
ஒரு விடிவை தா
வானமே எல்லையாய்
மகிழ் வாழ்வை தா (மை)
சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்
No comments:
Post a Comment