அதிகாலையில் உதிப்பவனாம்
ஆயுள் ஆரோக்கியம் தருபவனாம்
இருள் தனை விலக்குபவனாம்
ஈரேழுலகு காத்தருள்பவனாம்
உயிர் வாழ அருளுபவனாம்
ஊழ்வினை அறுப்பவனாம்
எழில் வண்ணத்தில் இருப்பவனாம்
ஏழு புரவி தேரில் உலவுபவனாம்
ஐஸ்வர்யம் அட்சயம் தருபவனாம்
ஒளிக் கதிரை வீசுபவனாம்
ஓமிடியை நீக்கும் ஓகாரவுருவாம்
ஔவியம் நீக்கி அருள்பவனாம்
ஆதவனை தினம் தொழுதிடுவோம்
அவன் அருளைப் பெற்றிடுவோம்.
சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்
No comments:
Post a Comment