கோடை மழை
வாராயோ
கொடையெனப்
பொழியாயோ (கோ)
கோடி பரிசு பண
மழை விழுமின்
கோடியில் ஒருவர்க்கே
உவகை தரும் !
கோடையில் வான்
மழை பெய்யுமின்
கோடானு கோடிக்கு
உவகை தருமே (கோ)
கத்திரி வெயில்
தனை கத்தரிக்க
சுட்டெரிக்கும் வெயில்
சூடினை தணிக்க
ஆலங் கட்டி மழை
என வருவாயே
ஆ நிறை மாந்தர் ஆட
மகிழ்வு தருவாயே (கோ)
மேகத்தை
கருக்க வா
தாகத்தை
தணிக்க வா
சோகத்தை
தீர்க்க வா
போகத்தை
அள்ளித் தா
சிலு சிலு
காற்றுடன் வா
சல சலவென
பொழிந்து போ
கல கலவென
மகிழ வா
வண்ண வான
வில்லொடு வா வா (கோ)
சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்
No comments:
Post a Comment