Friday, May 15, 2020

வீரம்


பாஞ்சாலி துகில் உரித்தகையிலே

        பலமிருந்தும்  மௌனம் காத்து

 

பார்வையாளனாய் நின்றான்

        பலஹீன பீஷ்ம பிதாமகன் !

 

பதி விரதை சீதயைக் காக்க

        பலமின்றி நின்ற போதும்

 

பத்து தலை இராவணனிடம்

        பலவானாய் போரிட்டான் ஜடாயு !

 

வீரம் என்பது உடல் பலத்தில்

        அல்ல மன பலத்தில் தானே !

 

சந்தர் சோமயாஜிலு (@)

சிவ ராம தாஸன்


No comments: