Tuesday, May 19, 2020

பீஷ்ம பிதாமகர்


சந்தனு ராஜனின்
நந்த குமாரா
குரு குலம் தோன்றிய
தேவ குமாரா (ச)

அட்டவசு தேவரின்
     அவதாரமே
அகிலமே போற்றிடும்
     அதி அற்புதமே

குரு குலம் காத்த
     சிரோன்மணியே
குருஷேத்ரம் கண்ட
     மகா வீர தீரனே

தன்னிகரிலா
     வில்லாளியே
தர்மம் காத்து நின்ற
     தவப் புதல்வரே (ச)

பிரம்மச்சரிய விரதம்
     பூண்ட தேவவிரதரே
பாகீரதி கங்கையின்
     பவித்ர புத்ரனே (ச)

ஆயிரம் நாமம்
     அருளி நின்றவரே தை
அட்டமி திதியில்
     முக்தி அடைந்தவரே

பரம பக்த பாகவத
     பீஷ்ம பிதாமகரே
பணிந்து போற்றினோம்
     பரம புருஷரே (ச)

சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்

No comments: