வாழ்க்கையொரு புத்தகமே
நவரச அனுபவமிகு
பக்கங்கள் நிறைந்ததொரு
காவிய புத்தகமே
அச்சத்தைக் கொடுத்திடும்
ஆனந்தம் தந்திடும்
ஆச்சர்யமும் தந்திடும்
பக்கங்களும் உண்டு
சினத்தை மூட்டிடும்
வீரத்தைக் காட்டிடும்
நகைச்சுவை தந்திடும்
பக்கங்களும் உண்டு
வருத்ததைத் தந்திடும்
வெறுப்பும் தோன்றிடும்
அமைதியைத் தந்திடும்
பக்கங்களும் உண்டு
ரகசியம் காத்திடும்
இனியன பகிர்ந்திடும்
காதலைப் புரிந்திடும்
திருப்பங்களும் உண்டு
மெய்யும் பொய்யும்
கலந்து இருந்திடும்
நட்பைக் காட்டிடும்
பக்கங்களும் உண்டு
பள்ளி படிப்பு பாதை
பணியென பாதி கழித்தோம்
பள்ளி கொண்ட தூக்கத்திலே
பாதியில் பாதி கழித்தோம்
இறப்புக்கும் பிறப்புக்கும்
இடைவெளி கொஞ்சமே
இடைப்பட்ட காலத்தில்
இனிதே வாழ்வோமே
வருகையிலே ஏதுமில்லை
போகையிலே ஏதுமில்லை
போட்டி பொறாமை கொண்ட
வாழ்க்கை தான் எதற்கு?
வெற்றி தோல்வியும்
உயர்வும் தாழ்வும்
திருப்பங்கள் நிறைந்த
பக்கங்களும் உண்டு
புரட்டிடப் புரட்டிடப்
புதுமைகள் தோன்றிடும்
படித்திடப் படித்திட
பரவசம் தந்திடும்
பக்கங்கள் புரட்டாது
சோர்ந்து இருந்திடின்
சுவாரஸ்யம் இல்லாது
சலிப்பைத் தந்திடும்
மறந்திட நினைத்திட
இரு வரம் பெற்றோம்
நல்லவை நினைந்திட
மற்றவை மறந்திட
என்றென வாழ்ந்தால்
நிம்மதியைத் தந்திடும்
வாழ்வினைக் கொண்டு
மகிழ்வுடன் வாழ்வோம்.
சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்
No comments:
Post a Comment