விழி இரண்டும்
பேசி நின்றால் வாய்
மொழி பேசிட
தேவை உண்டோ
ஆயிரம் மொழிகளில்
பேச துடிக்கும்
தூய இரு விழிகளின்
சங்கமம் அன்றோ
பாயும் நதி வேகம்
தடை படலாம்
சேரும் இவ்விழிகளுக்கு
வேகத் தடையுண்டோ
பிரிந்தவர் கூடினால்
மொழிக்கு இடமேது
கூறும் மொழி யாவும்
மௌன மொழியன்றோ
கன்னித் தமிழ் காக்கும்
மௌனம் இதுவே
காதல் தேவதைகள்
பேசிடும் மொழியிதுவே
நெஞ்சத்தை ஈர்த்திடும்
அன்பு மொழியன்றோ
ஒன்றென கலந்திடும்
காதல் மொழியன்றோ
சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்
No comments:
Post a Comment