சிந்தை உவந்து மகிழ்ந்திடவே
நெஞ்சமதில் வந்தமர்ந்தேன்
சிந்தனையெனும் ஓட்டத்தில்
எண்ணமாய் உதித்து நின்றேன்
உயிரும் மெய்யுமாய் கலந்து
எழுத்தாய் உருமாறி நின்று
அங்கும் இங்குமாய் இணைந்து
வார்த்தை வடிவினில் நின்றேன்
எதுகை மோனை சந்தமொலிக்க
வார்த்தை பல கோர்த்து நிற்க
புலமை நயம் ஓங்கி நிற்க
புதுமை பூத்து குலுங்கி நிற்க
பா புனையும் சிவ ராம தாஸன்
புலமை கவி நடையினிலே
பாமாலை வடிவம் கொண்டு
பாரில் எழில் உலா வந்தேன்
பக்தர் தம் இனிய நாவினில்
பிரம்மன் சிரசில் அமர்ந்திடும்
பாரதி நர்த்தனம் ஆடிடவே
பாடல் கீதமாய் மாறி நின்றேன்
பூமாலையை சூடி நின்றிடும்
இறையின் திருவருளாலே
பரமனின் இன் செவி மடுக்கும்
தேன் சிந்தும் பாமாலை நானே !
சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்
No comments:
Post a Comment